search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரில் மூழ்கி பலி"

    • தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
    • மாணவன் மரணம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள நாலூரை சேர்ந்தவர் அருள்நீதி. இவரது மகன் பிரேம்(12), அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் பிரேம் இன்று தனது நண்பர்களுடன் நாலூர் இந்துஜா நகர் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளான். அப்பொழுது தான் வைத்திருந்த தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளான்.

    உடன் இருந்த நண்பர்கள் தனது நண்பனை காணவில்லை என நீருக்குள் மூழ்கி தேடி சிறுவனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது மாணவன் பிரேம் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஏரியில் குளிக்கும்போது இறந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நண்பர் வீட்டிற்கு சென்ற நிலையில் பரிதாபம்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவரது மகன் முருகன் (வயது 24) இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த மாதம் 17-ந் தேதி ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது வரும் வழியில் நாட்டறம்பள்ளி அருகே கள்ளியூர் தீத்தான் கொல்லை பகுதியைச் சேர்ந்த நண்பர் சாந்தகுமார் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

    வீட்டு அருகே சாந்தகு மாருக்கு சொந்தமான 3 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டியை முருகன் சுவற்றின் மீது ஏறி நின்று எட்டி பார்த்தார்.

    தொட்டியில் தவறி விழந்து தலையில் அடிப்பட்டு மயங்கி கிழே விழந்தார். அவரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகன்ராமின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
    • செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், திருமலைராஜன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மோகன்ராம்(வயது19). பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டுபடித்து வந்தார்.

    மோகன்ராமுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு உடன் படிக்கும் நண்பர்கள் 7 பேருடன் செங்கல்பட்டு அருகே உள்ள இருங்குன்றம் பள்ளி பகுதியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றார். அனைவரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது மோகன்ராம் ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் மோகன்ராம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான மோகன்ராமின் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோகன்ராமின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் பகுதியில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது.
    • பிரவீன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கொத்தனார் வேலை செய்து வந்தார் என்பது விசாரணயில் தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் பகுதியில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சமாக இந்த நீர்வீழ்ச்சி இருந்து வருகிறது.

    தற்போது கோடை விடுமுறையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை காண குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வாழப்பாடி அருகே உள்ள வைத்தியகவுண்டன்புதூர் மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் பிரவீன்குமார் (வயது 18) மற்றும் அத்தனூர்பட்டியை சேர்ந்த அவரது நண்பர்கள் 7 பேர் முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர்.

    பிரவீன் குமார் நீச்சல் தெரியாததால் கரையின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நண்பர்கள் அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு கரைக்கு வந்தனர்.

    கரையில் அமர்ந்திருந்த பிரவீன்குமார் நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் நீர்வீழ்ச்சி முன்பு உள்ள நீரோடை குட்டையில் இறங்கி குளித்தார். அப்போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வெகுநேரமாகியும் கரை திரும்பாததால் நண்பர்கள் அவரை தேடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் குட்டையில் இறங்கி பிரவீன்குமார் உடலை மீட்டு ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இறந்த பிரவீன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கொத்தனார் வேலை செய்து வந்தார் என்பது விசாரணயில் தெரியவந்தது.

    • உடலை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (20). இவர் காங்கயத்தில் உள்ள கார்மெண்ட்ஸ்சில் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜுபைர் (22). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இருவரும் நண்பர்கள். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக முகமது ஜுபைர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை தங்களது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த முகமது தமிமுன் அன்சாரி (23), அபூபக்கர்சித்திக், முகமது ரிஸ்வான் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடினர்.

    இதனையடுத்து நண்பர்கள் 5 பேரும் நேற்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக நீர்நிலைகளில் குளிக்கலாம் என முடிவு செய்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அருகே உள்ள பெத்தாம்பாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றனர்.

    தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்தி ற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக சென்று கொண்டிருந்தது. இது தெரியாமல் விளையாட்டு மிகுதியால் முகமது ரிஸ்வான், முகமது ஜுபைர் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் 3 பேரும் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். பின்னர் சிறிது நேரத்திலேயே இருவரும் நீரில் மூழ்கினர்.

    இது குறித்து காஞ்சி கோவில் போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் கீழ்பவானி வாய்க்காலில் தேடிப் பார்த்தனர். பின்னர் இரவு நேரம் ஆனதால் தற்காலிகமாக தேடும் பணியை அவர்கள் நிறுத்தினர்.

    அதன் பின்பு இன்று காலை தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் தேடினர். அப்போது இன்று காலை முகமது ரிஸ்வான் மற்றும் முகமது ஜுபைர் உடல் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டது. அதன்பின் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களது உடலை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவர்கள் 2 பேரும் ஏரி நீரில் மூழ்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தனர்.
    • சிறுவர்களின் குடும்பத்திற்கும், கம்மாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், ஏரிக்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.

    மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8), தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14) சென்றனர். அப்போது ஒரு சில சிறுவர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட 2 சிறுவர்களும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் நீரில் மூழ்கினர்.

    இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டு பெரியவர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் ஏரியில் மூழ்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவர்கள் 2 பேரும் ஏரி நீரில் மூழ்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தனர். அவர்களின் உடலை வாலிபர்கள் மீட்டு ஏரியின் கரையில் வைத்தனர்.

    இதையடுத்து சிறுவர்களின் குடும்பத்திற்கும், கம்மாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அங்கு வந்த சிறுவர்களின் குடும்பத்தார் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவத்தால் குமாரமங்கலம் கிராமமே சோகத்தில் முழ்கியது.

    • நண்பர்கள் 4 பேரும் கார்த்திகேயன் மாயமானதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவரை தண்ணீரில் மூழ்கி தேடியும் கிடைக்கவில்லை.
    • கார்த்திகேயன் சடலத்தை கைப்பற்றிய காயார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    சென்னை, பட்டாபிராம், பாரதியார் நகர் மருதம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் கார்த்திகேயன்(21) இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு தெரியாமல் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில் உள்ள குட்டையில் நேற்று மாலை குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது மாலை 4 மணி அளவில் நீச்சல் தெரியாத கார்த்திகேயன் ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரில் திடீரென மூழ்கினார். அப்போது இவர்களுடன் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்தபோது கார்த்திகேயனுடன் வந்த நண்பர்கள் 4 பேரும் கார்த்திகேயன் மாயமானதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவரை தண்ணீரில் மூழ்கி தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் வெகு நேரமாக தேடிப்பார்த்தனர். பின்னர் இரவு நேரம் என்பதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து மீண்டும் இன்று காலை 8:30 மணி அளவில் இருந்து மறைமலைநகர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் 8 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக தேடியும் உடல் கிடைக்கவில்லை.

    இதனை அடுத்து சென்னை மெரினா பீச் காவல் நிலையத்தில் உள்ள 9 பேர் கொண்ட (ஸ்கூபா) நீர்மூழ்கி வீரர்கள் வந்து தண்ணீரில் அரை மணி நேரம் தேடினர். அப்போது காலை 11:30 மணி அளவில் கார்த்திகேயனின் சடலம் கிடைத்தது. இதனை அடுத்து கார்த்திகேயன் சடலத்தை கைப்பற்றிய காயார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனுடன் படித்து வந்த அவரது நண்பர்களான மோகன், வருண், அகத்தீஸ்வரன், விக்னேஷ் ஆகிய 4 பேரையும் காயார் போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து 4-வது முறையாக நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தண்ணீரில் மூழ்கி எடிசன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
    • கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா நகரை சேர்ந்தவர் எடிசன். கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். 48 வயதான எடிசனுக்கு திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    நேற்று மாலை 3 மணி அளவில் எடிசன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் எடிசன் இறங்கியுள்ளார். கரையில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்ற நிலையில் எடிசன் திடீரென சேற்றில் சிக்கினார். கரையில் இருந்த சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    எடிசன் தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் உடனடியாக விரைந்து வந்து ரப்பர் படகுகளில் சென்று எடிசனை தேடி பார்த்தனர். 3 படகுகளில் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு நேரம் ஆன நிலையில் கூவம் ஆற்றில் இருந்து விஷ வாயு போன்ற துர்நாற்றம் வீசியது. இதனால் தேடும் பணியை தீயணைப்பு படையினர் கைவிட்டனர்.

    இன்று காலையில் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. இதில் தண்ணீரில் மூழ்கி எடிசன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

    அவரது உடலை மீட்டு தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது எடிசனின் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்காக எடிசனின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சி மூசல் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.

    நேற்று மாலை அம்மை யப்பன் நகர் பகுதியில் உள்ள ஏரியில் ரவி மீன் பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்ட அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டனர்.

    அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    ஈரோடு:

    நேபால் மாநிலம் ராவுத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாராம் ராய் (29). இவர் ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு பிராசசிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.

    வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது பஞ்சாராம் ராய் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மில்லில் வேலை பார்க்கும் நபர்களிடம் இது குறித்து கூறினார்.

    இதனை அடுத்து அனைவரும் அக்ரஹாரம் வாய்க்கால் பகுதிக்கு சென்று பஞ்சாராம்ராயை தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் ஈரோடு வைரா பாளையம் பகுதியில் வி.எம்.பி. தோட்டம் அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் பஞ்சாராம் ராய் உடல் ஒதுங்கியது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஞ்சாராம் ராய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    • குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவருடைய மகன் மாயக்கண்ணன் (வயது 24). பொறியியல் பட்டதாரியான இவர், சம்பத்தன்று மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான திப்பம்பட்டி காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

    அப்போது அவர் ஆற்றின் ஒரு கரையிலிருந்து, மறுக்கரைக்கு நீந்தி செல்ல முயன்றார். சிறிது தூரம் நீந்தி சென்ற மாயக்கண்ணனால், ஆற்றில் நீண்ட நேரம் நீந்த முடியவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்த அவர், திடீரென ஆற்றில் மூழ்கினார்.

    இதை பார்த்த அங்கிருந்தவர்கள், மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பரிசலில் சென்று, சுமார் அரை மணி நேரம் தேடி மாயக்கண்ணனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நீச்சல் தெரியாத நிலையில் அந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
    • சின்னாற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த பாலக்கோடு கம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரவேல்.

    இவரது மகன் மோகனலிங்கம் (வயது 10). இந்த சிறுவன் தங்களுக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தான். நீச்சல் தெரியாத நிலையில் அந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    இது குறித்து குமரவேல் தந்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல பஞ்சப்பள்ளி அருகேயுள்ள ஜல் திம்மனூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் தேவராஜ் (13) என்ற சிறுவன் சின்னாற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×